ரியல் ஹீரோ ADSP சம்பிரிய குமார்! இப்படியும் ஒரு போலீஸா...?! #RealHero

  • 4 years ago
ஆணவமும் அதிகாரச் செருக்கும் நிறைந்த போலீஸ் துறையில், ஈரம் நிறைந்த மனதுடன் வாழ்ந்தவர் ஏடிஎஸ்பி சம்பிரிய குமார். லஞ்சம் தலைவிரித்தாடும் துறையில் இருந்தாலும், `நான் எவன்கிட்டயும் அஞ்சு பைசா வாங்கினதில்ல'னு நெஞ்சை நிமிர்த்திச் சொன்னவர். தன் பணிக்காலத்தில் 6 வருடத்தில் 23 முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டவர். நேர்மையற்ற எந்த விஷயத்துக்கும் துணை போனதில்லை. பணிக்காலத்தில் பலமுறை பழிவாங்கப்பட்டவர். இன்று உயிருடன் இல்லை. புற்றுநோய் அவரை காவுகொண்டுவிட்டது.

Recommended