கிடைத்த கேப்பில் புகுந்து விளையாடிய டோணி..நேற்றைய போட்டியில் தல செய்த சாதனை என்ன தெரியுமா?- வீடியோ

  • 6 years ago
இந்தியா மற்றும் இலங்கை மோதிய முதல் ஒருநாள் போட்டியில் டோணி சிறப்பாக ஆடி 65 ரன்கள் எடுத்தார். நேற்று நடந்த இந்த போட்டியில் இவர் மட்டுமே ஒழுங்காக ஆடினார். மிகவும் அதிரடியாக ஆடிய டோணி 65 ரன்கள் இருந்த போது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த போட்டியில் 65 ரன்கள் அடித்ததன் மூலம் இவர் புதிய சாதனை ஒன்றையும் படைத்து இருக்கிறார். நேற்றைய போட்டியில் டோணி மட்டுமில்லாமல் இந்திய அணியும் சில மோசமான சாதனைகள் படைத்து இருக்கிறது.
கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகில் டோணி எப்போது ஓய்வு பெறுவார் என்று பலரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இதனால் அவர் மீது பெரிய அழுத்தம் இருந்தது. இந்த அழுத்தத்துடன் விளையாடிய டோணி மிகவும் அதிரடி காட்டினார். இந்தியாவில் மொத்தம் 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். ஆனாலும் டோணி சிறப்பாக ஆடி 65 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணியின் ஸ்கோரில் பாதி ஆகும்.

இந்த போட்டியில் 65 ரன்கள் எடுத்ததன் மூலம் டோணி புதிய சாதனை படைத்து இருக்கிறார். அதன்படி இவர் 16,000 ரன்களை கடந்து இருக்கிறார். இந்திய அணியில் 16,000 ரன்களை கடக்கும் 6 வது வீரர் டோணி ஆவார். ஏற்கனவே சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். கோஹ்லி சில நாட்களுக்கு முன் இந்த மைல் கல்லை எட்டினார்.

Dhoni's create a record in first one day match against Sri Lanka. Dhoni took 65 runs in first one day match against Sri Lanka.He completed his 16,000 international runs during this match.

India vs srilanka 1st odi.

Recommended